Tuesday, June 20, 2017

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை
பேயும் க்கான பட முடிவு







பேய் மிரட்டி இலைத்துள்
தலைச் சுருளிக் கொடிதூள்

ஆகிய இரு தூள்களையும் சம அளவாக எடுத்துச் சம்பிராணித் தூளுடன் கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையைக் கரி நெருப்பில் போட புகை எழுப்பும். இவ்வாறு புகை போட பேய் பிசாசு வகைகள் அணைத்து ஒடும்

ஜாலக்காள் மை மந்திரம்

ஜாலக்காள் மை மந்திரம்

ஜாலக்காள் மை மந்திரம்
சித்து வேலைகளுக்கு  மிக எளிய வசியம் ஜாலக்காள்தேவி .
இந்த தேவியை மிக எளிய முறைககளில் வசியம் செய்யமுடியும்\
வழிமுறைகள்

அமாவாசை, கேட்டை நட்சத்திரம் கூடிய தினத்தில் ,அண்டம் சித்தண்டம்-பேரண்டம் மூன்றையும் ஒன்று சேர்த்து குழித்தைலம் இறக்கி ,தலை மண்டை ஓட்டில் வாங்கி அதோ,புனுகு,ஜவ்வாது,அததர்

சித்தர்கள் பாதாள அஞ்சனம்

சித்தர்கள் பாதாள அஞ்சனம்

சித்தர்கள் பாதாள அஞ்சனம்
பாதாள அஞ்சனம் என்பது புதையல் எடுக்க பயன்படுவது ஆகும்.
குப்பைமேனி வேர்              வெள்ளைசாரனை வேர்
வெள்ளெருக்கன் வேர்       வெள்ளைகாக்கணம் வேர்
வெள்ளைவிஷ்ணு காந்தி வேர்
இவை ஐந்தையும் முறை படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமால் பிடுங்கி, தீயில் கறுக்கி எடுத்து வைத்துகொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம்,குடல் போக்கி குழித்தைலம் எடுத்து, மேல் கண்ட மூலிகை வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டன் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன் பிறகு புனுகு,கோரோசனம்,பச்சைகற்பூரம்,குங்குமபூ ,கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் அடந்ததை தெரிந்துகொள்ள கல்வத்தின் அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அரைக்க அது மையில் தெரியும்..
இதற்கு பூஜை மந்திரம் எதுவும் நான் இங்கு கூறவில்லை. இதை ஒரு பகிர்வாக மட்டுமே பகிர்கிறேன்

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்
ஸ்லோகம்:
                          ஸ்ந்த்யா கால சூரியனைப் போன்றவளும் திக்குகளை பிரகாசிக்கும் ஒளி உடையவளும் சிவந்த ஆடை அணிந்தவளும் நவரத்ன கிரீடம் சூடி வரதம் எனும் முத்திரையுடன் கூடிய ஸ்ரீ சித்த வித்யா யஷணி தேவியை வணங்குகிறேன்.
மூல மந்திரம்:
                              "ஓம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌம் நமோ பகவதி பகவதி யஷ குல ப்ரமுகி சித்த வித்யா யஷணியை மமவசம் குருகுரு ஸ்வாஹா...."
நிவேதனம் :
                              பால், பழம்,தேன், கற்கண்டு, சுண்டல், வடை இவைகளை நிவேதனமாக கொண்டு மல்லிகை மலரால் பூஜை செய்து மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 27 நாட்கள் ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும் ...
பயன்கள் :

                      பலவித தேவைகளை அடுத்த நல்லவர்கள் மூலமாக நடத்திவைக்கும். முக்காலமும் சொல்லும், மற்றும் வசியம், மோகனம் சித்தியாகும்

அகத்தியர் மகா வசிய வீபூதி

அகத்தியர் மகா வசிய வீபூதி

அகத்தியர் மகா வசிய வீபூதி

கிருபையுள்ள புலத்தியனேவ  சியமென்று
 கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
 சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
 ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க்
கருவையினிச் சொல்லுஅகத்தியர் மகா வசிய வீபூதிகிறேன்க லசப் பாலாற்
 கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே
 புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
 செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும்
 வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு  னுகு சேர்த்து
 மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
 மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே
இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
 சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும்
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம்
 அப்பனே ஓம் கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர்
 பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள்
 துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ  சிய மாமே ...
                                                                               -அகத்தியர் பரிபூரணம்
அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும்.

முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்து விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...

தேரையர் சித்தர்

தேரையர் சித்தர்

தேரையர் சித்தர்
============

அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் அவ்வையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். அவ்வையுடன் வந்த சிறுவனை கண்டு அவனைப் பற்றி விசாரித்தார் அகத்தியர். அதற்கு அவ்வையார் இவன் பாவம் ஊமை பிள்ளை, உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார்.

உடனே சிறுவனான இராமதேவரை அகத்தியர் சீட னாக ஏற்றுக் கொண்டார். பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன் ஆனால் கூன் முதுகு உடையவர் இதை ஜாடைமாடையாக மக்கள் விமர்சிப்பதைத் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது கூனை சரி செய்து விடுவதாக கூறினார்.

சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார். சீடன் மூலிகைகளை கொண்டு வந்தவுடன் அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே அகத்தியர் ஊமை சீடனை ``அடுப்பைப் பார்த்துக்கொள்'' என்று ஜாடை காட்டிவிட்டு சென்றார்.

மூலிகை சாறு நன்றாக கொதித்துக்கொண்டிருந்தது சீடன் மிகவும் கவனமாக இருந்தார். கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல்கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்தது. இது கண்ட சீடன் இராம தேவன் மூலிகை சாறு பதமாகி விட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.

குறிப்பறிந்து செயல்பட்ட ராமதேவனை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது. காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்க முடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தலைவலியை குணப்படுத்துமாறு கதறினான்.

அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். அவருக்கு தலைவலியின் காரணம் புரிந்து விட்டது. சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்குபகுதியில் தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. இதை கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார்.

குருநாதரின் திகைப்பை கண்ட ராமதேவன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வந்து தேரையின் கண்களில் படு மாறு காண்பித்தான். தேரை ணீரை பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தில் குதித்தது. உடனே அகத்தியர் சந்தாகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மூடினார்.

சீடரை கட்டித்தழுவி பாராட்டினார். ராமதேவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார். அவனுடைய ஊமை தன்மையை போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளையெல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார். அகத்தியரின் சீடனாகி தொல்காப் பியம் என்ற இலக்கண நூலை இயற்றி தொல் காப்பியர் என்ற பெயரும் பெற்றார்.

பிறகு தேரையர் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காடுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்த சித்தர்களின் நோய்களைப் போக்கினார். ஒரு சமயம் அகத்தியருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்ட போது அவரது கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார்.

பார்வை தெளிவடைந்த அகத்தியர் சடைமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களின் விழுந்து வணங்கினார். ஒருநாள் அகத்தியர், தேரையரை அழைத்து தேரையா எனக்கு கண்வெடித்தான் மூலிகை வேண்டும் என்றார்.

கண் வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் போய்விடும் யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டு வருகிறேன் என்று காட்டுக்குச் சென்றார். கண் வெடிச்சான் மூலிகையைக் கண்டார். அதைப் பறிக்காமல் அங்கேயே உட்கார்ந்து கண்களை மூடி தேவியைத் தியானம் செய்தார். கவலைப்படாதே தேரையா!

மூலிகையை நானே தருகிறேன் என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண் வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு மூலிகையை அகத்தியரிடம் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்தார். நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய் நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது என்றார். குருவின் கட்டளைப்படி தேரையர் குலைபாடம் என்ற நூலை இயற்றினார்.

நெடுங்காலம் மருத்துவம் சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாளநாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார். தேரையரை வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு முக அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும். மூலமந்திரமாக ``ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!! என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்:- மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவை. தேரையரை தினமும் வழிபட்டு வந்தால் ஜாதகத்தில் சூரிய கிரஹத்தால் ஏற்படும் தோஷம் விலகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி குணமாகும். பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை தீரும். தீராத தலைவலி, இடுப்பு வலி நீங்க நலம் உண்டாகும்.

உடலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜி) நோய் சரியாகும். வீண்பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும். வாக்பலிதமும் ராசியோகமும் உண்டாகும். எந்த பிரச்சினையானாலும் சரி முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும். இவரை பூஜிக்க ஞாயிற்றுக்கிழமை சிறந்தது.

வாழ்கவளமுடன்

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்குழந்தைகளுக்கு க்கான பட முடிவு
மூலமந்திரம்
அகார உகார மாரக விந்தா ஆதாய பரப்பிரம்ம
மூர்த்தி என்னும் வந்த விஷங்களும் சர்வ கட்டிகளும்
சர்வ வைப்புகளும் இதுக எல்லாம்  தரி தரி முரி முரி
தாக்கு தாக்கு சர்வபேத பிசாசுகள் நான் கையில்
வேப்பிலை எடுத்தவுடன் பஞ்சா பறக்க சுவஹா
இந்த மந்திரத்தை மந்திரத்தை 108  முறை உபாசனை செய்து சித்தியாக்கி பின்பு

குழந்தையை தாயின் மடியில்மீது உட்கார வைத்து கிழக்கு முகமாக குத்தச் சொல்லி வேப்பிலையால் 10  முறை மந்திரித்து குழந்தை உச்சியில்லிருந்து மூன்று தடவை iபூமியில் இறக்கவும்.

மகா வசிய சக்தி சாரணை

மகா வசிய சக்தி சாரணை

 மகா வசிய சக்தி சாரணை

பொற்றியென்ற சக்திசா ரணையை வாங்கப்
 பொருந்தியதொர் சங்கரம நாளில்சென்று
ஊற்றியென்னும் நூல்கட்டி மந்திரந்தான்
 உரைத்திடவே ஓம்பரமா பரமானந்தி
மாற்றி மகா சக்தி கமல வல்லி
 மாதாவே என்று சொல்லி சமூலம் வாங்கி 
நெற்றியெனும் பொடியாக்கி நித்தங்கொள்ள
நிலைத் தெந்த ஆயுதமும் தைத்திடாதே
                                                                           -கருவூரார்
பொருள்:                                 
                  சக்தி சாரணையைமகா வசிய சக்தி சாரணை எடுக்க சங்கரம நாளில்  சென்று நூலால் காப்பு கட்டி ."ஓம் பரமா பரமானந்தி மகா சக்தி கமலவல்லி மாதாவே " என்று மந்திரம் சொல்லி சமுலமாக எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் உண்ண,எந்தவித ஆயுதமும் உடலில் தைக்காது [உடலில் ஆயுதம் பாயாது

குலதெய்வ தரிசனம் கனவில் வர இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க

குலதெய்வ தரிசனம் கனவில் வர இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க



குலதெய்வ தரிசனம் கனவில் வர
இஷ்ட தெய்வம் மற்றும்
குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க
உதவும் மந்திரம்
இம்மந்திர ஜெபத்தின் பயனாக
நமக்கு விருப்பமான தேவதையின்
( இஷ்ட தெய்வம்,குலதெய்வம்)
தரிசனம் கனவில் கிடைக்கும்.சில
நாட்களில் அந்த தெய்வத்தோடு
பேசி நம் விருப்பங்களை
நிறைவேற்றிக்
கொள்ளலாம்.மேலும் உறங்கும்
முன் ஏதேனும் ஒன்றை கனவில்
காண வேண்டுமென்றால்
ஊதுபத்தி ஏற்றிச் செம்பில் தண்ணீர்
வைத்துக் கொண்டு இன்ன
காரியம் அறியவேண்டும் என்று
சங்கல்பம் செய்து 108 தடவை
மந்திரம் ஜெபித்து செம்பில் உள்ள
தீர்த்தத்தைக் குடித்து உறங்கினால்
வேண்டியது கனவில்
வெளிப்படும்.
சனிக்கிழமை காலை அல்லது
இரவில் ஆரம்பிக்கலாம்.ஸ
்வப்நேச்வரி தேவியின் படத்தை
பிரேம் செய்து முன்னால்
வைத்துக் கொள்ளவும். வீட்டை
அல்லது பூஜை அறையை பச்சைக்
கற்பூரம் கலந்த நீரால் சுத்தம்
செய்யவும்.பின்னர் நெய்
விளக்கேற்றி பூக்களால் விளக்கை
அர்ச்சனை செய்து
,சாம்பிராணி,குங்கிலியம்
போட்டு கற்பூரஆரத்தி
காட்டவும்.வெள்ளை விரிப்பு
விரித்துக் கிழக்கு முகமாக
அமரவும்.தினமும் குறிப்பிட்ட
ஒரே எண்ணிகையில் ஜெபம்
செய்து 45 முதல் 90 நாட்களுக்குள்
51000 உரு மந்திரம் ஜெபித்து
முடிக்க மந்திரம் சித்தியாகும்.
(45 நாட்கள் என்றால் 44 நாட்களுக்கு
1133 எண்ணிக்கையும் 45 வது நாள்
1148 உரு ஜெபித்து பூஜையை
முடிக்கவும்.)
(90 நாட்கள் என்றால் 89 நாட்களுக்கு
566 எண்ணிக்கையும் 90 வது நாள்
626 உரு ஜெபித்து பூஜையை
முடிக்கவும்.)
மந்திரம் :-
ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
இஷ்ட தர்ஷய நமஹா||
இம்மந்திரம் பல தாந்த்ரீகர்கள்,
ஜோதிடர்கள் மற்றும் யோகிகளால்
பயன்படுத்தப்படுகிறது. குல தெய்வம் அறியும் வழிபாடு
-------------------------------------------------
குல தெய்வம் தெரியாதவர்கள்,
ஜாதகத்தில் ராசிக்கு பூர்வ புண்ணிய
ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் வீட்டின்
அதிபதிக்குரிய கடவுளையோ அல்லது ஐந்தாம்
வீட்டின் அதிபதி பெற்ற சாரநாதரின்
அதிபதிக்குரிய தெய்வத்தை மனமுருகி
வணங்கி வர, குலதெய்வம் பற்றிய
செய்தி பிறர் மூலமோ அல்லது கனவிலோ
அல்லது ஏதாவது ஒருவகையில்
அறியப்பெறுவீர்கள்.
உதாரணமாக, மீன ராசி எனில் பூர்வ
புண்ணிய வீடு கடகம் அதன் அதிபதி
சந்திரன். சந்திரனுக்குரிய அதிதேவதை
பார்வதி ஆவார். மேலும் சந்திரன்
அமர்ந்த நட்சத்திரம் உத்திரட்டாதி எனில்,
அதன் அதிபதி சனி ஆவார். சனியின்
அதிதேவதை ஐயப்பன் ஆவார். இவவரை
மனமுருகி தொடர்ந்து பிராத்தனை
செய்ய, குலதெய்வம் பற்றி அறிய
உதவுவார்கள்.

எடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்

எடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்விபூதி க்கான பட முடிவு
நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை மலர் சாற்றி ,தேங்காய், பழம் ,சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி  இவைகளுடன் ஒரு தகட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும்
முதலில் முறைப்படி விநாயகர் பூஜை  முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து
வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பி விபூதிதில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும். அதனுள்ளே ‘’ சிவாயநம’’ என எழுத வேண்டும்.
பின்பு
ஓம் சிவாய நம ஓம்
ஓம் சர்வ சக்தி ஓம்
ஓம் ஓங்கார சக்தி ஓம்
 ஓம் பிரணவப் பொருளே ஓம்
ஓம் பஞ்சாட்சரமே ஓம்
ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம்
 ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே  ஓம்
ஓம் சவர் ஜெயசக்தியே ஓம்
ஓம் மசி நசி அங் மங் சங் 
ஆதார சக்தியே ஓம்
இந்த மந்திரத்தை 11 நாள்  தினம்  108 விதம் செய்து வர சித்தியாகும் . சித்தியான பிறகு ஒரு முறை கூறி விபூதி பரப்பி தகட்டில் கற்பூரம் ஏற்றி வணங்கினால் போதும்
இந்த விபூதியை எல்லா வகைக் காரியங்களும் நலம் பெற நெற்றியில் பூசினால் போதும், வசியம் வசீகரம், காரியசித்தி இவைகள் ஏற்படும்

காரிய ஜெயம் உண்டாகும் அனுமான் அஷ்டகம்

காரிய ஜெயம் உண்டாகும் அனுமான் அஷ்டகம்
பஞ்சமும் அனுமான் க்கான பட முடிவு
நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.

வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே

பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

Search This Blog

நந்தி காதுகளில் ரகசியம்

நந்தி காதுகளில் ரகசியம்
நந்தி க்கான பட முடிவு
நந்திஸ்வரர் காதுகளில் நாம் சொல்லலாமா ? அப்படி சொல்லுவது என்றால் என்ன சொல்ல வேண்டும்........

நம் நாட்டில் சிலை வழிபாடு மிக மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. என்பதனை நாம் அறிவோம். எந்தனை அற்புதங்களை கண்ட சித்தர்கள் இதில் எந்த வித குழப்பமும் இல்லாமல் நமக்கு கற்களை தேர்ந்து எடுத்து கொடுக்க காரணம் நாம் அறிந்து கொள்ளவேண்டும் . கற்கள் , பாறை என்று மட்டும் அவர்கள் நினைக்க வில்லை, இவைகள் ஒளியும் ஒலியும் சேர்ந்தது என்று அவர்கள் புரிந்து கொண்டனர். ஆம் கற்களை தேர்வு செய்வதில் மிக மிக வல்லமை படைத்தவர் கருவுரார் சித்தர்.. போகர் இவரிடம் தாம் சிலைகளை செய்ய சொல்வார். ஒரு கல்லை (பாறை )
பார்த்து அதில் 32 லக்ஷணம் அமைந்து இருந்தால் அவை வழிபாட்டிற்கு உகந்தது என்று முடிவு செய்வார் இவர் . பாறையின் உள்ளே தேரை இருந்தால் அவைகள் ஒச்சம் என்று விட்டுவிடுவார்.

மிக சிறந்த சிற்பி ஆசான்களை கொண்டது இலங்கை பட்டிணம். இங்கிருந்து நிறைய நபர்கள் அரவு நாடான நம் நாட்டிக்கு பாறைகளை தேடி வந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது . பல்லவர்கள் சிற்பங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார்கள் . பரஞ்சோதி அடிகள் காஞ்சிபுரம் வந்த பிறகு தான் வாதாபியில் இருந்து விநாயகர் சிலை காஞ்சிபுரம் வந்தது . பிறகு கணபதி உருவம் செய்வது பால பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப் பட்டது , இந்த சிலைகள் நாட்டில் எல்லா இடத்திற்கும் எடுத்து செல்லப்பட்டது. சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை லிங்கமாக ,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

பாறைகள்வெயில்காலத்தில் குளிர்ச்சி தன்மைகளை உண்டாக்கும் , மழை காலத்தில் உஷ்ண தன்மைகளை உண்டாக்கும். இதை சமணர்கள் அறிவார்கள். ,ஆகவே தான் அவர்கள் குன்றுகளை தேர்வு செய்தனர் . மன்னன் சித்தர்கள் சொல்படி கோவிலை கட்டிய பின் அவைகளை பற்றியும் ,முறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள சாதுக்களை, சித்த நெறியில் உள்ளவர்களை அழைத்து வந்து கோவிலை ஆராய்ந்து தவறுகள் இருந்தால் சொல்லும் படி கேட்பார் . இப்படி ஒரு காஞ்சிபுர அரசன் சித்தர் நெறிகளை உடையவரை தம் கோவிலுக்கு அழைத்து வந்தான். 32 லக்ஷனமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு உயிர் கொடுத்தால் உயிர் உண்டாகும் என்று அவர் அறிந்து இருந்தார். கருவுரர் சித்தரை நினைத்து நந்தியின் காதுகளில் அவர் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது , மன்னன் வியந்தான்,மக்கள் அதிசியப் பட்டனர். இதன் பிறகு உயிர் பெற்ற நந்தி கோவிலை விட்டு வெளியை சென்றது . வேடிக்கை பார்த்த மக்கள் பரவசம் அடைந்து பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்தி வயலில் பயிர்களை உண்ணத் தொடங்கியது. அது வரை விபரிதம் உணராத மக்கள் பயம் அடைந்தனர் . நந்தி பிறகு தோப்புகளில் நுழைந்து விட்டது .

நந்தியினால் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட மக்கள் அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல் நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்றார் . சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1 குறைந்தபடியால் அது கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி கொடுத்து வனம் சென்றார்.
.
அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்து இன்றும் நந்தியின்காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் . இது தவறு . நந்தியிடம் நாம் சொல்ல வேண்டியது (காதுகளை தொடாமல் )

சிவாய நம ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்